சபரிமலை: மண்டல பூஜைக்காக தங்க அங்கி ஊர்வலம்!

sabhari malai
sabhari malai

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நாளை புறப்படுகிறது. சபரிமலையில் தற்போது மண்டல காலபூஜைகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று முதல் பெருவழிப்பாதையை திறக்கப்பட உள்ளது.

தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த தங்க அங்கி நாளை காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்படும். 25ம் தேதி பம்பையை அடையும்,

பின்னர் பம்பை கணபதிகோயில் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும்.

மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

‘நேரடி நெய்யபிஷேகம் தொடங்கியது’
சபரிமலையில் நெய்யபிஷேகம் மிகவும் முக்கியமானதாகும். ஐயப்பனுக்கு பிடித்த இந்த வழிபாடு தினமும் அதிகாலை முதல் மதியம் வரை நடைபெறுவது வழக்கம்.

பக்தர்கள் இருமுடியில் கட்டிவரும் நெய்யை, பாத்திரங்களில் கொண்டு வந்து கோயிலில் கொடுப்பர். இந்த நெய் நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நேரடி நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை கோயிலில் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொடுக்க வேண்டும்.

அதன்பின்னர் அபிஷேகம் செய்த நெய்யை வேறொரு கவுன்டரில் இருந்து வாங்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் நடத்த தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் நேரடி நெய்யபிஷேகம் தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories