சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜை துவக்கம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில்  ஆனி மாத பூஜைக்காக  கோயில் நடை  திறக்கப்பட்டு இன்று முதல் ஆனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tamil News large 3053370 - 2026

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று(ஜூன் 15) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள்எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், நெய்யபிஷேகம்  கணபதிஹாேமம் உள்ளிட்டவழக்கமான பூஜைகள் துவங்கியது. எல்லாநாட்களிலும் உஷ பூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை மறறும் படிபூஜையும் நடக்கும். ஜூன் 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.இன்று காலை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி க்கப்பட்டனர். சபரிமலை செயல் அலுவலராக கிருண்குமார், நிர்வாக அதிகாரியாக சாந்தகுமார் பொறுப்பேற்றனர்

Related articles

Recent articles

spot_img