T20 Eng Vs Ind: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

eng vs ind t20 - 2026

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டி20 போட்டி –
இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

K.V. பாலசுப்பிரமணியன்

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி (215/7, டேவிட் மலான் 77, லியம் லிவிங்ஸ்டோன் 42) இந்திய அணியை (198/9, சூர்யகுமார் யாதவ் 117, ஷ்ரேயாஸ் ஐயர் 28) 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். ஹார்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், பிஷ்னோய், ஆவேஷ்கான், உம்ரான் மாலிக் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள். பார்கின்சனுக்குப் பதிலாக சால்ட், கரனுக்குப் பதிலாக டாப்லி ஆகியோர் விளையாடினர். பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் எட்டாவது ஓவரில் அவுட்டானார். சால்ட் எட்டு ரன் மட்டுமே எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

அதன் பின்னர் டேவிட் மலானும் லிவிங்ஸ்டோனும் மிகச் சிறப்பாக ஆடினர். இருபது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 215 ரன் எடுத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆறு விக்கட்டுகள் எடுத்தபோதும் ரன் அதிகமாகக் கொடுத்திருந்தனர்.

இந்திய அணி ஆடவந்தபோது, 20 ஓவரில் 216 ரன் அடிக்க முடியும் என்றே அனைவரும் நினைத்தனர். ஏனென்றால் ஆட்டக்களம் பேட்டர்களுக்குச் சாதகமாக இருந்தது. பவுண்டரி எல்லைகளும் சிறியதாக இருந்தது.

ஆனால் நடந்தது வேறு. பவர்ப்ளே ஓவர்களான ஆறு ஓவர்கள் முடிவதற்குள் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மூவரும் ஆட்டமிழந்து, இந்திய அணி ஆறு ஓவர் முடிவில் 34/3 என்ற ரன் கணக்கில் இருந்தது.

சூர்யகுமார் யாதவும் (55 பந்துகள், 117 ரன்) ஷ்ரேயாஸ் ஐயரும் (23 பந்துகள், 28 ரன்) 15 ஓவர்களில் 150 ரன்னுக்குக் கொண்டுவந்தனர். சூர்யகுமார் யாதவ் 18.5 ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற வாய்ப்பிருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக்கும், ரவீந்தர் ஜதேஜாவும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

எனவே 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 9 விக்கட் இழப்பிற்கு 198 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இனி ஜூலை 12, 14, 17 தேதிகளில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories