December 6, 2025, 8:37 AM
23.8 C
Chennai

T20 Eng Vs Ind: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

eng vs ind t20 - 2025

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டி20 போட்டி –
இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

K.V. பாலசுப்பிரமணியன்

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி (215/7, டேவிட் மலான் 77, லியம் லிவிங்ஸ்டோன் 42) இந்திய அணியை (198/9, சூர்யகுமார் யாதவ் 117, ஷ்ரேயாஸ் ஐயர் 28) 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். ஹார்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், பிஷ்னோய், ஆவேஷ்கான், உம்ரான் மாலிக் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள். பார்கின்சனுக்குப் பதிலாக சால்ட், கரனுக்குப் பதிலாக டாப்லி ஆகியோர் விளையாடினர். பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் எட்டாவது ஓவரில் அவுட்டானார். சால்ட் எட்டு ரன் மட்டுமே எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் டேவிட் மலானும் லிவிங்ஸ்டோனும் மிகச் சிறப்பாக ஆடினர். இருபது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 215 ரன் எடுத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆறு விக்கட்டுகள் எடுத்தபோதும் ரன் அதிகமாகக் கொடுத்திருந்தனர்.

இந்திய அணி ஆடவந்தபோது, 20 ஓவரில் 216 ரன் அடிக்க முடியும் என்றே அனைவரும் நினைத்தனர். ஏனென்றால் ஆட்டக்களம் பேட்டர்களுக்குச் சாதகமாக இருந்தது. பவுண்டரி எல்லைகளும் சிறியதாக இருந்தது.

ஆனால் நடந்தது வேறு. பவர்ப்ளே ஓவர்களான ஆறு ஓவர்கள் முடிவதற்குள் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் ஷர்மா மூவரும் ஆட்டமிழந்து, இந்திய அணி ஆறு ஓவர் முடிவில் 34/3 என்ற ரன் கணக்கில் இருந்தது.

சூர்யகுமார் யாதவும் (55 பந்துகள், 117 ரன்) ஷ்ரேயாஸ் ஐயரும் (23 பந்துகள், 28 ரன்) 15 ஓவர்களில் 150 ரன்னுக்குக் கொண்டுவந்தனர். சூர்யகுமார் யாதவ் 18.5 ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற வாய்ப்பிருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக்கும், ரவீந்தர் ஜதேஜாவும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

எனவே 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 9 விக்கட் இழப்பிற்கு 198 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இனி ஜூலை 12, 14, 17 தேதிகளில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories