ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

01 Sep20 Asia cup - 2026

பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் ஷர்துல், கலீல் நீக்கப்பட்டு பூம்ரா, ஹர்திக் சேர்க்கப்பட்டனர். இமாம் உல் ஹக், பகார் ஸமான் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இமாம் 2 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார். பகார் ஸமான் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் பந்துவீச்சில் சாஹல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.இந்த நிலையில், பாபர் ஆஸம் சோயிப் மாலிக் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். பாபர் 47 ரன் (62 பந்து, 6 பவுண்டரி) எடுத்து குல்தீப் சுழலில் கிளீன் போல்டானார்.

ஹர்திக் காயம்: ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது 5வது ஓவரை வீசியபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரால் நிற்க முடியாததால் ஸ்ட்ரெச்சரில் வைத்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு அந்த ஓவரின் கடைசி பந்தை வீசி நிறைவு செய்தார்.

கேப்டன் சர்பராஸ் அகமது 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, சோயிப் மாலிக் 43 ரன் எடுத்த நிலையில் (67 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆசிப் அலி 9, ஷதாப் கான் 8 ரன் எடுத்து கேதார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த பாகீம் அஷ்ரப் 21 ரன் எடுத்து (44 பந்து, 2 பவுண்டரி) பூம்ரா வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார். ஹசன் அலி 1 ரன், உஸ்மான் கான் டக் அவுட்டாகி வெளியேற… பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 162 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. முகமது ஆமிர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கேதார் ஜாதவ் தலா 3, பூம்ரா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்தியா 50 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். நிதான ஆட்டம் ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தனர். ரோகித் சர்மா 52 ரன்னிலும், தவான் 46 ரன்னிலும் அவுட்டாயினர. 29 ஓவரில் இந்திய அணி 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories