December 5, 2025, 2:26 PM
26.9 C
Chennai

Tag: பெண் பத்திரிகையாளர்கள்

போலீஸார் கைது செய்தால் உயிருக்கு ஆபத்து: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்கிறார் எஸ்.வி.சேகர்!

ஈ.வே.ரா விவகாரத்தில் பெரியார் மண் என்பது குறித்து கேலி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து, வாயில் லத்தியைப் போட்டுத் திணித்து ஆட்டுவேன் என்று, அந்தப் பகுதி காவலர் ஒருவர் வெறியுடன் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில், போலீஸார் கைது செய்தால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கூறி எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது.

பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?

இப்பொழுது, அனைத்து பத்திரிகையாள சங்கங்களும் இந்த நிகழ்வுக்காக கொதித்துப் போய் புகார்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, களத்தில் பணி புரியும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவச் சொற்கள் ஏதும் இல்லாது போனால், அதுவே மிகப் பெரும் ஆறுதலாக அமையும்!