சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை!

sabhari malai - 2026

சபரி மலை ஐயப்பன் கோயில் சீசனுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பாஜக சிவகாசி முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.ஆறுமுகசாமி, மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்

அவா் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..

வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவார்கள்.

இந்நிலையில் சென்னையிருந்து கொல்லம் வரை ஒரு விரைவு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இரு மார்க்கத்திலும் இந்த ரயில் பக்தா்களுக்கு போதுமானதாக இருக்காது. எனவே சென்னை-கொல்லம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

train 1 e1564983941341 - 2026

விருதுநகா், சிவகாசி வழியே கொல்லத்திற்கு பாசஞ்சா் ரயில் இயக்க வேண்டும். தற்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு பாசிஞ்சா் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினசரி இரவு மதுரை வந்தடைந்து விடுகிறது.

இந்த ரயிலை மதுரையுடன் நின்று விடாமல் விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, அரியங்காவு என கொல்லம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஏழை எளிய பக்தர்கள் பயன் பெறுவார்கள்.

செங்கோட்டை-கோயம்புத்தூர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. அந்த ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தியோதா ரயில், தாம்பரம்-செங்கோட்டை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இயக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக இந்த ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories