spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்பஸ்ஸில் பக்கத்தில் வந்து நிற்க சொல்லி இந்த பெண்கள் செய்யும் செயல்! அதிர்ச்சியில் ராமநாதபுரம்!

பஸ்ஸில் பக்கத்தில் வந்து நிற்க சொல்லி இந்த பெண்கள் செய்யும் செயல்! அதிர்ச்சியில் ராமநாதபுரம்!

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பகுதி முத்துரெகுநாதபுரம்.. இங்கு வசித்து வரும் 62 வயது குஞ்சரம் என்பவர் ராமநாதபுரத்துக்கு பஸ் ஏறியுள்ளார்.

பஸ் ரொம்ப கூட்டமாக இருந்துள்ளது.. அதனால் நெரிசலில் நின்றபடியே வந்துள்ளார் குஞ்சரம். அந்த சமயத்தில்தான் 2 பெண்கள் பர்தா அணிந்து அங்கு நின்றிருந்தனர். குஞ்சரத்திடம், ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க.. இப்படி வாங்க. எங்க கிட்ட வந்து நில்லுங்க” என்று கூப்பிட்டுள்ளனர்.

அதனால், குஞ்சரம்மாவும் கொஞ்சம் தள்ளி வந்து 2 பெண்கள் நடுவில் நின்று கொண்டார். பிறகு ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் வராததுமாக 2 பெண்களும் அவசர அவசரமாக இறங்கினர். அப்போதுதான் 2 பெண்களும் குஞ்சரத்தின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து கொண்டு இறங்கியது தெரிந்தது. இதை பஸ்ஸில் இருந்த சிலரும் கவனித்து கூச்சல் போட்டனர்.

அதிர்ச்சி அடைந்த, குஞ்சரமும் உடனே கீழே இறங்கி அவர்களை பின்னாடியே துரத்தினார்.. கூச்சலிட்டுக் கொண்டே ரோட்டில் ஓடினார்.. மற்ற பயணிகளும் பின்னாடியே 2 பெண்களை துரத்தி ஓடி 2 பெண்களையும் கப்பென பிடித்து கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 பேருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். கூட்டமான பஸ்ஸில் ஏறி நகை, பணத்தை சுருட்டுபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe