December 6, 2025, 8:48 PM
26.8 C
Chennai

தலைமுடியை விற்று குழந்தைகளின் பசி நீக்கிய தாய்!

hair - 2025

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர்கள் செல்வம்- பிரேமா தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் செல்வம் வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார்.

அந்த செங்கல் சூளை உரிமையாளரிடம் கடன் வாங்கிய செல்வம் அதை அடைக்க பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க கடன் தொகை 5 லட்சத்தை எட்டியதால் செல்வம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் பிரேமா 3 குழந்தைகளை வைத்து கொண்டு பரிதவிக்க வறுமை வாட்டி வதைத்தது. கடன்காரர்கள் பிரேமாவுக்கு நெருக்கடி கொடுக்க, பிரேமாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

hair 2 - 2025

ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். உயிர் காப்பாற்றப்பட்டாலும் பசியால் வாடும் பிள்ளைகளை பார்க்கும் போது பிரேமா கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருந்தார்.

விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பிரேமா, தனது தலைமுடியை விற்க முடிவு செய்துள்ளார். அதன்படி தலைமுடியை 150 ரூபாய்க்கு எடைக்கு போட்டு அதில் வந்த பணத்தின் மூலம் குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார்.

இந்நிலையில் பிரேமாவின் வறுமையை அறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட பலரும் பிரேமாவின் வறுமையை போக்க தங்களால் முயன்றயளவு உதவியுள்ளார். இதன் மூலம் கிடைத்த ரூபாய் ஒரு லட்சத்தை பிரேமாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலா, ‘பிரேமா இனி தவறான முடிவு எடுக்க மாட்டார். இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துவிட்டது. இத்தனை அன்புக்கும் என்ன மறுமொழி சொல்வதென்று பிரேமாவிற்கு புரியவில்லை. அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருகிறது. ஒரு சொட்டு கண்ணீர் ஓராயிரம் நன்றிகளுக்கு சமம்.

அத்தனையும் நண்பர்களே உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். நீண்ட நம் உதவிக்கரங்களும், அன்பும் அந்த பெண்ணுக்கு புது தைரியத்தை கொடுத்திருக்கிறது. உடனடியாக கழுத்தை நெரிக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்த்து வைக்க இப்போது வந்திருக்கும் பணம் போதும்.

hair 1 - 2025

இனி நண்பர்கள் பணம் அனுப்ப வேண்டாம். பிரேமாவும் அதை எதிர்பார்க்கவில்லை. இனி ஒரு வண்டி வாங்கி கொடுத்தால் போதும் அண்ணா பழம் காய்கறிகள் விற்று மீதி கடனை நானே சம்பாதித்து கட்டிக்கொள்கிறேன் என்கிறார். அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு பெரிய சல்யூட், அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்த உங்களுக்கும் ஒரு பெரிய சல்யூட்.

இனி பிரேமா பிழைத்துக்கொள்வார். இனி அவருக்கு தேவை, நாங்கள் இருக்கிறோம் சகோதரி என்கிற வார்த்தைகள் மட்டுமே..!!’ என்று பதிவிட்டுள்ளதோடு, பிரேமாவின் குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

பிரேமாவின் குடும்ப சூழலை பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன், பிரேமாவிற்கு விதவை உதவி தொகை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories