செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகள் சரணாலயத்தில் 20 வகையான 15,000-க்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளன.
அக்டோபர் மாதம் ஐந்தாயிரத்து 500 பறவைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இனப்பெருக்கத்திற்காக பறவைகளின் வரத்து அதிகரித்ததாக கூறப்படுகிறது.
நத்தை கொத்திநாரை, வெள்ளை நிற அரிவாள் மூக்கன், நீர்க்காகம், கூழைகடா உள்பட வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக வேடந்தாங்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் பறவைகளை காண வார விடுமுறை நாட்களின் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.