கொரோனா: 2 ஆட்டோ ஓட்டுநருகளுடன் தொடர்பில் இருந்தவர்கள்.. 20 பேருக்கு பரிசோதனை! அச்சத்தில் திருப்பூர்!

auto

திருப்பூரை அடுத்த இடுவாய் பகுதியில் 2 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் 3 கட்டங்களாக வரும் மே 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளி நாடு சென்று வந்தவர் என மொத்தம் 112 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாலும், 6 நாள்களாக யாருக்கும் புதிய பாதிப்பு இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் நிலையில் இருந்தது.

திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த 22 வயது மற்றும் 50 வயதுடைய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அங்கிருந்து தர்பூசணியை ஆட்டோவில் ஏற்றி விற்பனைக்காக இடுவாய்க்கு கொண்டுவந்தனர்.

ஆனால் இங்கு வந்த இருவருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரு ஓட்டுநர்களும் தாமாகவே முன்வந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனிடையே, அவர்களுடன் கறி விருந்தில் பங்கேற்றவர்கள், கபடி விளையாடியவர்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, இருவரும் வசித்து வந்த ராஜகணபதி நகர், ஆட்டையாம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், இடுவாயில் இருந்து மங்கலம் செல்லும் சாலையையும் காவல் துறையினர் இரும்புத் தடுப்பு வைத்து தடுத்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக இடுவாய், பாரதிபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்தப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories