1131 வடமாநிலத்தவர் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு!

train katpati - 2026

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 2-ம் கட்டமாக தமிழக அரசு செலவில் சிறப்பு இரயில் மூலம் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 1131 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், இதர தொழில் செய்யவும் வேலூர் வந்த பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 9903 பேர் கடந்த 40 நாட்களுக்கு முன் வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் நிதியில் நேற்று முன்தினம் , ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1140 பேர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். 2-ம் கட்டமாக நேற்று இரவு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1131 பேர் சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

train katpati 1 - 2026

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில், வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக உள்ளதால் அங்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் இது தவிர பல்வேறு தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வடமாநிலத்தார் ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர்.

அவர்களை தமிழக அரசின் செலவில் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி முதல்வரின் உத்தரவை அடுத்து முதல் சிறப்பு ரயில் மூலம் கடந்த 6-ஆம் தேதி ஜார்க்கண்டை சேர்ந்த 1140 பேரும், இன்று 1131 பேரும் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பீகாரை சேர்ந்த 1300 நாளையும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 4500 பேர் 4 ரயில்கள் மூலம் அனுப்ப திட்டமிட்டோம். இதற்கு தென்னக ரயில்வே க்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 1000 பேருக்கு குறைவாக உள்ள மாநிலத்தாரை ரயிலில் அனுப்ப முடியாது என்பதால் மாற்று வழியை அரசுடன் சேர்ந்து ஆலோசித்து வருகிறோம்.

train katpati 2 - 2026

பெரும்பாலும் சென்னைக்கு அனுப்பி அங்கிருந்து மற்ற ரயில்களில் கலந்து அனுப்ப வாய்ப்புள்ளது. இதுவரை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 60 பேர் வேலூருக்கு வந்துள்ளார்கள். அவர்களை 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதிகம் பாதித்த மாநிலத்தில் இருந்து வருவோரை மண்டபத்தில் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வேலூரை சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால் இ பாஸ் மூலம் பதிவு செய்யவேண்டும். அதே சமயம் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை வரவேற்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. வேலூரில் இருந்து கோயம்பேடு போகும் கீரைகளை தடுத்து நிறுத்தவுள்ளோம். அவற்றை இங்கேயே விற்பனை செய்ய திட்டமிட்டோம் என அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories