வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயம்! மர்மநபர்களை தேடும் காவல் துறை!

cow
file pic

ராணிப்பேட்டை அருகே வனவிலங்கு வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு சென்ற சினை பசு மாடு படுகாயமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் மோட்டூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நரசிம்மன், இவருக்கு சொந்தமான 5 மாதம் சினையாக உள்ள பசு சீக்கரஜபுரம் பெரிய ஏரியில் வெள்ளிக்கிழமை காலை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசு மாட்டின் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடிசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பசு மாட்டின் கீழ் தாடை கிழந்து தொங்கி ரத்தம் வெளியேறிபடி பசு அலறியடித்து துடித்துள்ளது.இது குறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் சிப்காட் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையில் மர்ம நபர்கள் காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டு மறைத்து வைத்திருந்ததும், அங்கு மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு தெரியாமல் கடித்ததால் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து புளியங்கண்ணு அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு படுகாமடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டை மாங்கொட்டையில் மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories