தென்மேற்கு பருவக்காற்று எதிரோலியால் சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலின் வடக்கு, மத்திய மேற்கு, ஆந்திர கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலின் வடக்கு, மத்திய தெனமேற்கு பகுதிகளிலும் 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.