தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
தலைமை ஆசிரியர் – 01
ஆகம ஆசிரியர் – 01
எழுத்தர் – 01
சமையலர் – 01
சமையலர் உதவியாளர் – 01
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.35,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்கள் அல்லது www.hrce.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hrce.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.