இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா?

hindumunnani
hindumunnani

இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா? இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக காங்கிரஸ் அரசு தீபாவளி அன்று படடாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு உணவு கட்டுப்பாட்டு துறை இனிப்பு, பலகாரங்களுக்கு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து மிரட்டுகிறது.

மாசு கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் என இவர்கள் அனைவரும் இந்துக்களின் பண்டிகை, விழாக்களுக்கு மட்டும் திடீரென தோன்றி அறிவுரை, எச்சரிக்கை விடுக்கும் அதிசய பிறவிகள். இவர்களின் நோக்கம் ஒன்றுதான், அது பண்டிகைகளில் ஏற்படும் இந்துக்களின் உற்சாகம் மற்றும் ஒறறுமையை சீர்குலைப்பதுதான்.

இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று இந்து முன்னணி கூறவில்லை. அதேசமயம் வருடம் முழுவதும் இந்த அறிவுரையை செயல்படுத்துகிறார்களா? தீபாவளி இனிப்பு, பலகாரத்திற்குப் பொருந்தும் தர நிர்ணயம், ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கும் பொருந்தும் அல்லவா?

வீதிக்கு வீதி பீப் பிரியாணி அலுமினிய வட்டாவில் எழும் சத்தம் இந்த உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் காதில் விழவில்லையா என்ற கேள்வி சாதாரண மக்களுக்கும் எழுகிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.

கூட்டணியில் இருக்கும் திமுக இதுபோன்ற நேரங்களில், தமிழக நலன் கருதி முதல்வரின் நண்பரான, கூட்டணி கட்சியான காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யாவிடம் பேசி தமிழக தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளின்படி சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த, நமது பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தர வேண்டும் எனற கருத்தை நினைவுகூர்கிறோம்.

நமது பண்டிகைகள் யாவும் இறைவனை வழிபடுவது ஆகும். எனவே இந்துக்கள் புனிதமான, பவித்தரமான பொருட்களை வாங்கிட நமது நம்பிக்கையை பின்பற்றுவோரின் தயாரிப்புகளை, பொருட்களை வாங்கி இறைவனுக்குப் படைத்து கொண்டாட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பண்டிகை நேரத்தில் தான் அரசு ஊழியர்களின் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்களின் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை செய்கின்றன. இதுவும் இடதுசாரி அமைப்புகளின் வேலையாக இருக்கிறது.

எனவே தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து பண்டிகைகளை குதூகலமாக கொண்டாடுவோம். தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட கேட்டுக்கொள்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories