சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு ப்ரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபையில் இருந்து வெளியேறுவதாக திமுக., காங்கிரஸ், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்குக் கூடியதும் சபாநாயகர் தனபால் கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எழுந்து டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை வற்புறுத்தினார்கள். ஆனால் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க சபாநாயகர் மறுத்து விட்டார். அவர் கூறும்போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க எந்த முகாந்தரமும் இல்லை. எந்த விதிப்படி கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க சொல்கிறீர்கள் என்று எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து கேட்டார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். ‘‘ஒரு மனதாக அனைத்து உறுப்பினர்களும் முடிவு எடுத்தால்தான் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து மற்ற அலுவல்களை எடுக்க முடியும். ஆனால் நீங்கள் மட்டும் வற்புறுத்துவதால் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை மாற்ற இயலாது. இந்த அவையை நடத்த கூடாது என திட்டமிட்டு குந்தகம் விளைவிக்கிறீர்கள். இதனை அனுமதிக்க முடியாது. எனவே கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்று சபாநாயகர் கூறினார். இதன் பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் குறித்து விவாதிக்க வற்புறுத்தினர். ஆனால் காலையில்தான் தீர்மானம் தந்து இருப்பதாகவும் இந்த பிரச்னையை இப்போதே எடுக்க வேண்டும் என்று யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்று சபாநாயகர் மறுத்தார். அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘‘அரசிடம் இருந்து பதில் வந்தால் தான் சபாநாயகர் எந்த பிரச்சனையையும் எடுக்க முடியும். எனவே சபாநாயகருக்கு யாரும் கட்டளையிட முடியாது’’ என்றார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேச முற்பட்டனர். சபாநாயகர் அனுமதி தராததால் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Hot this week
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

