ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்

ஓசூர்:

ஓசூர் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மர்ம கும்பல் வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வட்டக்காடு தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(38). சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம், 9ம் தேதி, தன் நண்பர் சியோஜியுடன் வாடகை காரில், சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு நித்யா என்ற பெண்ணிடம் இருந்து, 2.5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டார்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி அருகே வரும் போது, பின்னால் காரில் வந்த, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், மாரியப்பன் சென்ற காரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய மாரியப்பன் மற்றும் சியோஜியை கத்தியை காட்டி மிரட்டி, பாஸ்போர்ட், மொபைல்போன் மற்றும் காரில் இருந்த, 31 லட்சம் மதிப்புள்ள, 2.5 கிலோ தங்கத்தை மர்ம கும்பல், வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.

பாஸ்போர்ட் மற்றும் மொபைல்போன் மட்டுமே முதலில் திருட்டு போனதாக, கடந்த மாதம், 10ம் தேதி சிப்காட் போலீசில் புகார் செய்த மாரியப்பன், நேற்று முன்தினம் மீண்டும், ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

இதில், கடந்த மாதம் நடந்த வழிப்பறியில் தன், 2.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்யப்பட்டதாககுறிப்பிட்டிருந்தார். இதனால், வழிப்பறி செய்யப்பட்ட, தங்கம் கடத்தல் தங்கமாக இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் நித்யா என்பவர், பல்வேறு சோதனைகளை தாண்டி, தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு விமான நிலையத்திலும், தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய சிலரை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories