December 5, 2025, 3:39 PM
27.9 C
Chennai

விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

02 July21 stalin - 2025

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து கார் மூலம் இன்று 11 மணியளவில் விழுப்புரம் வருகிறார். மாவட்ட எல்லையான விக்கிரவாண்டியில் சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி அருகில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுக்கெடுக்கிறார்.

மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. தொடக்க நிகழ்ச்சியாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. கருணாநிதியின் புகழ்பெற்ற பாடல்கள் பாடப்படுகின்றன.

முப்பெரும் விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ.வரவேற்று பேசுகிறார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழும், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்குகிறார்.

மேலும் மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்துக்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகிய விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் கட்சி நிகழ்ச்சி என்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழா நடைபெறும் மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள், கட்-அவுட்டுகள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories