விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

02 July21 stalin - 2026

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து கார் மூலம் இன்று 11 மணியளவில் விழுப்புரம் வருகிறார். மாவட்ட எல்லையான விக்கிரவாண்டியில் சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி அருகில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுக்கெடுக்கிறார்.

மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. தொடக்க நிகழ்ச்சியாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. கருணாநிதியின் புகழ்பெற்ற பாடல்கள் பாடப்படுகின்றன.

முப்பெரும் விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ.வரவேற்று பேசுகிறார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழும், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்குகிறார்.

மேலும் மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்துக்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகிய விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் கட்சி நிகழ்ச்சி என்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழா நடைபெறும் மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள், கட்-அவுட்டுகள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories