விழுப்புரத்தில் இன்று தி.மு.க.முப்பெரும் விழா – விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

02 July21 stalin - 2026

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து கார் மூலம் இன்று 11 மணியளவில் விழுப்புரம் வருகிறார். மாவட்ட எல்லையான விக்கிரவாண்டியில் சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி அருகில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுக்கெடுக்கிறார்.

மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. தொடக்க நிகழ்ச்சியாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. கருணாநிதியின் புகழ்பெற்ற பாடல்கள் பாடப்படுகின்றன.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

முப்பெரும் விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ.வரவேற்று பேசுகிறார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழும், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்குகிறார்.

மேலும் மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்துக்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகிய விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் கட்சி நிகழ்ச்சி என்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

விழா நடைபெறும் மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள், கட்-அவுட்டுகள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories