#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?: லீனா கேள்வி

leena manimekalai - 2026

சென்னை: கோடம்பாக்கத்தில் மீடு விவகாரத்தில் ஏன் முக்கியத் தலைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை.

பணியிடங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள்” தொடர்பான அனுபவங்களை ஏராளமான பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய #metoo இயக்கம் இந்தியாவிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதைக் குறித்த எதிர்வினைகளுக்கு, பல ஊடக நண்பர்கள் என் பதிலை எதிர்பார்ப்பதால், அனைவரையும் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்ட லீனா, இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி ஏன் தாமதம்? உடனே சொல்லியிருக்கலாமே என்பதுதான்.

பத்திரிகையாளர்கள் ஒருவர் விடாமல் கேட்கும் கேள்வி; ஏன் தாமதம். ஏன் குற்றம் நடந்தவுடன் முறையிடவில்லை?

அடுத்து, ஏன் கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் மெளனம் சாதிக்கிறார்கள்? மெளனம் சாதிக்கிறவர்கள் குற்றத்திற்கு துணை போகிறவர்கள். குற்றவாளிகளை விட மோசம் அவர்கள். இன்னும் சரியாக சொன்னால், மெளனம் சாதிக்கிறவர்களை நான் வெகுவாக சந்தேகிக்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது இவ்வளவு படைப்பு வேலைகள் செய்து ஒரு ஆளாகி நிற்கும்போதே இவ்வளவு பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே! அப்போதே சொல்லியிருந்தால் என்ன குற்றவாளியை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி என்னை பாதுகாத்திருப்பீர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறார் லீனா மணிமேகலை!

முறையிடும் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என உங்களிடமே அந்தக் கேள்வியை திருப்புங்கள்! முறையிடும் பெண்ணை ஏன் களங்கப் படுத்துகிறீர்கள் என சமூகத்திடம் கேளுங்கள்! ஏன் இந்தக் குற்றங்கள் நடக்கிறது என அதிகாரத்திடம் கேளுங்கள். முறையிடுவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பாதிக்கபட்ட பெண் மட்டுமே பொறுப்பாக முடியாது. #metoo என்று பதில் கூறும் லீனா மணிமேகலை, முன்னதாக இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் அத்துமீற முயன்றார் என்றும், தன் கையில் கத்தி வைத்திருந்ததால் தாம் தப்பித்ததாகவும் கூறியிருந்தார். அதை அடுத்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories