குட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு!

gutkha - 2026

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில், குட்காவை விற்பனை செய்ய அனுமதி அளிக்க, அதிகாரிகள் மாதந்தோறும் ரூ. 2.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!

குட்கா முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலைக்கு உரிமம் மட்டுமே வழங்கியதாகவும், முறைகேடுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.

அதன் பின்னர் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தின் போது, 2013 முதல் 2015 வரை மாதம் ரூ. 2.50 லட்சம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர். இதற்கான ஆதாரம் உள்ளது என்றார்.

அவரது இந்தக் கருத்தைக் கேட்ட நீதிபதி, மாதம் இரண்டரை லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றச்சாட்டு இருப்பதால் தற்போது ஜாமின் வழங்க முடியாது என உத்தரவிட்டார்.

இதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, குட்கா வழக்கில் கைது செய்யப் பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்களான சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories