ஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே! அது சரிதானா?

ramanavami
ramanavami

கேள்வி:- ஸ்ரீ ராமனின் பிறந்த திதியை ஸ்ரீராம நவமி என்கிறோம். பின் அதே நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே? தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம்? சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்ததா? ஸ்ரீ ராமன் பிறந்த வருடத்தின் பெயர் என்ன?

பதில்:- இதன் மீது ஆராய்ச்சி செய்து புராணங்களின் ஆதாரத்தோடு அறிஞர்கள் கண்டறிந்த திதி பற்றிய முடிவுகள் உள்ளன.

ஸ்ரீ ராமன் விளம்பி நாம ஆண்டில் சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியன்று புதன் கிழமையில் புனர்வசு நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் ஜனனம் எடுத்தார். இது ‘அபிஜித் லக்னம்’ என்று போற்றப்படுகிறது. சௌம்யமான வருடம் பங்குனி மாதம் பௌர்ணமியன்று உத்திரை நட்சத்திரத்தில் சீதாராமர் விவாகம் நடந்தேறியது.

பவித்திரமான ராம ஜன்ம திதியன்று கல்யாணமும் நடத்தி அதன் மூலம் சீதா ராமரின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்பது நம் முன்னோர் ஏற்படுத்திய நல்ல ஆசாரம். இவ்விரண்டிற்கும் பத்ராசல ஸ்ரீராம நவமி உற்சவத்தோடு தொடர்புள்ளது. ராம பக்தர்கள் நிறைந்துள்ள நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஸ்ரீ ராம நவமியன்று பந்தல் போட்டு உற்சவமாக உற்சாகத்தோடு சீதா கல்யாணம் நடக்கிறது.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

தெய்வீகம், மனிதத் தன்மை என்ற இரண்டு ஆதர்ச தத்துவங்களின் ஒன்றிணைந்த தம்பதிகளாக சீதாவும் ஸ்ரீராமனும் போற்றப்படுகிறார்கள். குடும்ப அமைப்புக்கு மூலாதாரமான தாம்பத்திய அமைப்பின் பத்திரத்திற்காக புண்ணிய தம்பதிகளான சீதாவும் ராமனும் வணங்கி வழிபடப்படுகிறார்கள். அது மட்டுமின்றி, லட்சுமீ நாராயண சொரூபங்களான சீதா ராமரின் இந்த ஆராதனை விரும்பிய கோரிக்கைகளை ஈடேற்றி கஷ்டங்களை விலக்கக் கூடியது.

இந்த கல்யாணத்தின் வடிவாக அந்த சாஸ்வதமான தம்பதிகளை பூஜித்து பிறவிப் பயனை அடைவதே இதன் பரமார்த்தம். சித்திரை மாத சுக்ல பட்ச சப்தமியன்று ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் நடந்ததேறியது.

ஆன்மீக மற்றும் தார்மீகசந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories