ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 80 சதவீத பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதனால் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று குறைந்து விட்டதால் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.  அதன்படி ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06140) ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற மே 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06141) ஊட்டியில் மதியம் 12.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவில்லா 2 பெட்டிகள் வருகிற 4-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06138) குன்னூரில் மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

அதுபோல் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் ஊட்டியில் காலை 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06143) குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06136) மேட்டுப்பாளையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு முன்பதிவில்லா பெட்டியும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது. 

ஊட்டியில் இருந்து குன்னூர் வரை 2 முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டி மேட்டுப்பாளையம் வரையும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

images 35 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories