‘நல்ல மலை’ சுற்றுலா பயணிகளுக்கு மூன்று மாதம் ‘பிரேக்’!

nallamalai forest - 2026 நல்ல மலைக் காடு  2.5 லட்சம் ஹெக்டேர் விரிந்து பரந்திருக்கிறது. இதில் 1.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை புலிகள் நடமாடும் வனப் பகுதிக்காகவே ஒதுக்கியுள்ளார்கள். இதனையே ‘அம்ராபாத் அபயாரண்யம் ராஜீவ் காந்தி புலிகள் சரணாலயம்’ என்று அழைக்கிறார்கள்.

இரு தெலுங்கு மாநிலங்களிலும் விரிந்து பரந்து உள்ள நல்ல மலைக்காடுகள் சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்கு உதந்ததாக விளங்கி வருகிறது. பெருமளவில் பார்வையாளர்களின் வருகையை ஈர்த்து வருகிறது இதன் இயற்கை அழகு.

Nallamala forest side e1561991249647 - 2026ஜூலை 1 முதல் மூன்று மாதங்களுக்கு காட்டுக்குள் சுற்றுலா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல மலையின் இயற்கை அழமைக் கண்ணாரக் கண்டு மகிழ தற்காலிகமாக வாய்ப்பு இல்லாமல் போனது பற்றி இயற்கை ஆர்வலர்கள் தங்கள் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் மூன்று மாதம் வரை காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.

விலங்குகள் குட்டி போடுவதற்கு இதுதான் அனுகூலமான காலம் என்பதால் அவற்றுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு வனவிலங்கு இலாகா இந்த முடிவை எடுத்துள்ளது.Srisailam Tiger reserve sign board - 2026

நாகர்கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் செல்லும் வழியில் உள்ள நல்ல மலைக் காடுகளில் பல இடங்கள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்து வருகின்றன. எனவே நாட்டின் பல இடங்களில் இருந்தும் சுற்றிப் பார்க்க இயற்கை ஆர்வலர்கள் வருவது வழக்கம். சனி ஞாயிறு நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இயல்பான இயற்கை அழகையும், காட்டில் சுதந்திரமாகத் திரியும் விலங்குகளையும் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதில் வியப்பில்லை. மழைக் காலத் தொடக்கமே விலங்குகள் குட்டி போடும் காலம். எனவே அச் சமயத்தில் மனிதர்கள் தென்பட்டால் விலங்குகள் தாக்கக்கூடும். புலி கரடி, காட்டுப்பன்றி, காட்டு நாய்கள் போன்ற பிராணிகளுக்கு பார்வையாளர்களால் ஆபத்து நேரும் அபாயம் உள்ளதால் இந்த இடைக்கால தடையை வன இலாகா அதிகாரிகள் விதித்துள்ளார்கள்.

இதுபோன்ற தற்காலிகத் தடை 2017 முதல் அமலில் இருக்கிறது. நல்ல மலையில் விலங்குகளின் பாதுகாப்புக்காக வன இலாகா அதிகாரிகள் பிரத்தியேகமான திட்டங்களை வகுத்துள்ளார்கள். சிசிடிவி கேமராக்கள் ரோந்து பணிகள் இரவு நேர காவலர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். விலங்குகளின் இனப்  பெருக்கத்திற்கு பாதுகாப்புத் திட்டங்களை வகுத்துள்ளனர்.

nallamalai - 2026நாகர்கர்நூல் மாவட்டம் அம்ராபாதிலுள்ள மன்னனூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் நல்ல மலை உள்ளது. அழகான பசுமை வனங்கள், பள்ளத்தாக்குகள், உயரமான மலைச் சிகரங்களை இங்குள்ள ‘பர்ஹாபாத் வ்யூ பாயிண்ட்’ பகுதியிலிருந்து அருகில் பார்க்க முடியும்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

வன இலாகா ஏற்பாடு செய்துள்ள சிறப்பு வாகனத்தில் ஏறி வன விலங்குகளையும் அருகில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. மன்னனூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கமகாதேவி குகைகளுக்கு கூட பக்தர்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories