Homeவீடியோஐப்பசி பௌர்ணமி: கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள்!

ஐப்பசி பௌர்ணமி: கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள்!

-

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது. சிவனுக்கு 16 வாசனை திரவியங்கள் அபிஷேகத்துடன் அன்ன அபிஷேகமும் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு, பிரசாதமாக சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதே போல், மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி, எழுத்தர் வசந்த், கவிதா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இதே போல, சோழவந்தான் வட்டப் பிள்ளையார் ப கோவில் அருகே உள்ள, புட்டு விநாயகர் ஆலயத்தில் வரதராஜப் பண்டிட் தலைமையில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலர் சிவனை வழிபட்டு பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். மேலும், சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதசுவாமி துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களிலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சிவனுக்கு அண்ணாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சிவனுக்கு அன்னாபிஷேகம்:

மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் சிவ பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதை அடுத்து, அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போல, மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் ,ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

மேலும், மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு, ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -