April 26, 2025, 11:26 PM
30.2 C
Chennai

மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!

திருச்சி: மணல் திருட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர் மீது  குண்டர்  சட்டத்தில் நடவடிக்கை  எடுக்க மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  திருவாசி கொள்ளிடம்  ஆற்றில் அனுமதியின்றி  மணல்  திருடிய  லாரியையும்,  மணல்  திருட்டிற்கு உதவிய மண்ணச்சநல்லூர்  வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி  மற்றும் அவரது  ஜீப் ஆகியவற்றை திருவாசி மக்கள் 3 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனர்..

திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் அருகே  திருவாசி  கொள்ளிடம் ஆற்றில்   மணல்  அள்ளிய லாரியையும்,  மணல் திருடு பவர்களுக்கு  உடைந்தையாக இருந்த  மண்ணச்சநல்லூர் வருவாய்வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது  ஜீப்பையும்  அப்பகுதி  கிராம மக்கள்  3  மணி  நேரமாக  சிறைபிடித்து வைத்தனர்.  வட்டாட்சியர் மற்றும் லாரியையும் மண்ணச்சநல்லூர் போலீஸார் மீட்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கொள்ளிடம்  ஆற்றில்  தினசரி  இரவு லாரிகளில்  மணல்  திருடுவதாக அப்பகுதி  மக்கள்  மண்ணச்ச நல்லூர் வருவாய்  வட்டாட்சியருக்கு  தினசரி தகவல்  கொடுத்து  வந்தனர்.

ஆனால் சம்பவ  இடத்திற்கு மண்ணச்ச நல்லூர்  வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி வந்தாலும்  மணல்  திருட்டு தடுக்கப்படவில்லை.  இந்நிலையில்  தான்  திருவாசி கொள்ளிடம்  ஆற்றில்  மீண்டும்  வியாழக்கிழமை  இரவு  மணல் திருட்டு  நடந்து  கொண்டிருந்தது.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸி.,யை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இந்தியா!

சம்பவ இடத்தில் அரசு ஜீப்பில் அமர்திருந்த  வட்டாட்சியரிடம்  அப்பகுதியை  சேர்ந்த  வழக்கறிஞர்  திவாகர்  மணல்  திருடிக் கொண்டு  3 லாரிகள்,  1  பொக்லின்  ஆகியவை  தப்பிச்  செல்கிறதென  கூறியுள்ளார்.

உங்கள் வேலையைப் பாருங்கள் எனக்கு  தெரியும்.  மீறி  என்னை தொந்தரவு  செய்தால்  அரசு அதிகாரியை  பணி  செய்ய விடாமல் தடுத்ததாக  உங்கள்  மீது நடவடிக்கைகள்  எடுப்பேன்  என மிரட்டியுள்ளார்  வட்டாட்சியர்.

அதன் பிறகு  கிராம  மக்கள்  40  திற்கும் அதிகமானோர் சம்பவ  இடத்திற்கு  வந்தபோது ஆற்றிலிருந்து  மணல்  ஏற்றி  வந்த லாரியையும்,  வட்டாட்சியர் ரேணுகாதேவி  மற்றும்  அவரது ஜீப்பையும்  பொதுமக்கள்  சிறைபிடித்தனர்.

அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர்  மண்ணச்சநல்லூர்  ச.அய்யம்பாளையம்  பகுதியைச் சேர்ந்த  பாலையா  மகன்  நந்தகுமார், பொதுமக்கள்  மற்றும்  போலீஸார் முன்னிலையில்  மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர்  தான்   லாரி  கேட்டார் எனக்  கூறினார்.

இது குறித்து வட்டாட்சியர் ரேணுகா தேவியிடம் செய்தியாளர்கள்  கேட்டதற்கு  பதில்கூற  மறுத்துவிட்டார்.  ஆனால் அத்தடியான்  என்பவர்  வட்டாட்சியர் அருகேயே  நின்று  கொண்டு வட்டாட்சியர்  சமயபுரம்  பகுதியில்  ரூ.3 கோடி  மதிப்பில்  கட்டும்  வீட்டிற்கு தான்  மணல்  செல்கிறது எனவும், தொடர்ந்து  இப்பகுதியில்  நடக்கும் தொடர்  மணல்  திருட்டுக்கு வட்டாட்சியர் தான் காரணம் என்றும் கூறினார்..

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ  இடத்திற்கு  வந்த மண்ணச்சநல்லூர்  போலீஸார்  லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர் நந்நகுமார்,  மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி மற்றும்  அவரது  ஜீப்  ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..

பின்னர் லாரியையும், லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர்  மகன் நந்தகுமார்  ஆகியோரை  கைது செய்து  மண்ணச்ச நல்லூர்  காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்றனர்..  திருவாசி  கிராமத்தை  சேர்ந்த விவசாய  ஒருங்கிணைப்பு  குழு தலைவர்  அன்புசெழியன்   தொடர் மணல்  திருட்டில்  ஈடுபடும் திருடர்களிடம்  பணம் பெற்றுக் கொண்டு  அதிகார  துஷ்பிரயோகம் செய்யும்  வட்டாட்சியர்  ரேணுகாதேவி மீது குண்டர் சட்டத்தின் படி  வழக்கு பதிய  புகார்  கொடுத்தார்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Topics

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories