மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!

sddefault 17 - 2026

திருச்சி: மணல் திருட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர் மீது  குண்டர்  சட்டத்தில் நடவடிக்கை  எடுக்க மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே  திருவாசி கொள்ளிடம்  ஆற்றில் அனுமதியின்றி  மணல்  திருடிய  லாரியையும்,  மணல்  திருட்டிற்கு உதவிய மண்ணச்சநல்லூர்  வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி  மற்றும் அவரது  ஜீப் ஆகியவற்றை திருவாசி மக்கள் 3 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனர்..

திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் அருகே  திருவாசி  கொள்ளிடம் ஆற்றில்   மணல்  அள்ளிய லாரியையும்,  மணல் திருடு பவர்களுக்கு  உடைந்தையாக இருந்த  மண்ணச்சநல்லூர் வருவாய்வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது  ஜீப்பையும்  அப்பகுதி  கிராம மக்கள்  3  மணி  நேரமாக  சிறைபிடித்து வைத்தனர்.  வட்டாட்சியர் மற்றும் லாரியையும் மண்ணச்சநல்லூர் போலீஸார் மீட்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கொள்ளிடம்  ஆற்றில்  தினசரி  இரவு லாரிகளில்  மணல்  திருடுவதாக அப்பகுதி  மக்கள்  மண்ணச்ச நல்லூர் வருவாய்  வட்டாட்சியருக்கு  தினசரி தகவல்  கொடுத்து  வந்தனர்.

ஆனால் சம்பவ  இடத்திற்கு மண்ணச்ச நல்லூர்  வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி வந்தாலும்  மணல்  திருட்டு தடுக்கப்படவில்லை.  இந்நிலையில்  தான்  திருவாசி கொள்ளிடம்  ஆற்றில்  மீண்டும்  வியாழக்கிழமை  இரவு  மணல் திருட்டு  நடந்து  கொண்டிருந்தது.

சம்பவ இடத்தில் அரசு ஜீப்பில் அமர்திருந்த  வட்டாட்சியரிடம்  அப்பகுதியை  சேர்ந்த  வழக்கறிஞர்  திவாகர்  மணல்  திருடிக் கொண்டு  3 லாரிகள்,  1  பொக்லின்  ஆகியவை  தப்பிச்  செல்கிறதென  கூறியுள்ளார்.

உங்கள் வேலையைப் பாருங்கள் எனக்கு  தெரியும்.  மீறி  என்னை தொந்தரவு  செய்தால்  அரசு அதிகாரியை  பணி  செய்ய விடாமல் தடுத்ததாக  உங்கள்  மீது நடவடிக்கைகள்  எடுப்பேன்  என மிரட்டியுள்ளார்  வட்டாட்சியர்.

அதன் பிறகு  கிராம  மக்கள்  40  திற்கும் அதிகமானோர் சம்பவ  இடத்திற்கு  வந்தபோது ஆற்றிலிருந்து  மணல்  ஏற்றி  வந்த லாரியையும்,  வட்டாட்சியர் ரேணுகாதேவி  மற்றும்  அவரது ஜீப்பையும்  பொதுமக்கள்  சிறைபிடித்தனர்.

அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர்  மண்ணச்சநல்லூர்  ச.அய்யம்பாளையம்  பகுதியைச் சேர்ந்த  பாலையா  மகன்  நந்தகுமார், பொதுமக்கள்  மற்றும்  போலீஸார் முன்னிலையில்  மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர்  தான்   லாரி  கேட்டார் எனக்  கூறினார்.

இது குறித்து வட்டாட்சியர் ரேணுகா தேவியிடம் செய்தியாளர்கள்  கேட்டதற்கு  பதில்கூற  மறுத்துவிட்டார்.  ஆனால் அத்தடியான்  என்பவர்  வட்டாட்சியர் அருகேயே  நின்று  கொண்டு வட்டாட்சியர்  சமயபுரம்  பகுதியில்  ரூ.3 கோடி  மதிப்பில்  கட்டும்  வீட்டிற்கு தான்  மணல்  செல்கிறது எனவும், தொடர்ந்து  இப்பகுதியில்  நடக்கும் தொடர்  மணல்  திருட்டுக்கு வட்டாட்சியர் தான் காரணம் என்றும் கூறினார்..

இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ  இடத்திற்கு  வந்த மண்ணச்சநல்லூர்  போலீஸார்  லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர் நந்நகுமார்,  மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர்  ரேணுகாதேவி மற்றும்  அவரது  ஜீப்  ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..

பின்னர் லாரியையும், லாரி ஓட்டுநர்,  லாரி  உரிமையாளர்  மகன் நந்தகுமார்  ஆகியோரை  கைது செய்து  மண்ணச்ச நல்லூர்  காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்றனர்..  திருவாசி  கிராமத்தை  சேர்ந்த விவசாய  ஒருங்கிணைப்பு  குழு தலைவர்  அன்புசெழியன்   தொடர் மணல்  திருட்டில்  ஈடுபடும் திருடர்களிடம்  பணம் பெற்றுக் கொண்டு  அதிகார  துஷ்பிரயோகம் செய்யும்  வட்டாட்சியர்  ரேணுகாதேவி மீது குண்டர் சட்டத்தின் படி  வழக்கு பதிய  புகார்  கொடுத்தார்!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories