செய்திகள்.. சிந்தனைகள்.. – 01.08.2019
நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
அனைவருக்குமான வீடு திட்டத்தை 2022க்குள் நிறைவேற்ற வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் சிக்கல்களை உடனடியாக அகற்ற அதிகாரிகளை முடுக்கியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்
அகஸ்டா வெஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையின் போது தப்பிச்சென்ற காங்கிரஸ் மத்திய பிரதேச முதல்வரின் மருமகன் ரத்துல் பூரியை வியாழக்கிழமை வரை கைது செய்யக் கூடாது என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
மாலை 6 மணிக்கு மேல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிபதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு – ராஜ்சபாவில் அமளி
விவசாய உரமானியம் 20% அதிகரிப்பு என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இந்த கல்விக்கொள்கையை வரவேற்று இருப்பார் என்று அப்துல் கலாம் ஆலோசகர் பொன் ராஜ் அவர்கள் பேசியுள்ளார்.