இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில், கைபர் மாகாணத்தில் காரக் மாவட்டத்தில் உள்ள டெரி கிராமத்தில் பரம்ஹன்ஸ்ஜி மகராஜ் சமாதி கோவில் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ், இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறி விட்டதாக மாகாண தலைமைச் செயலர், ஐஜி, கமிஷனர் ஆகியோர் பதிலளித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் வகார் அகமது, இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அவரது வாதங்களைக் கேட்ட அமர்வு, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோவிலை மீட்குமாறு, கைபர் மாகாண அரசுக்கு உத்தரவிட்டது. பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற இந்து மதத் துறவி, 1919ல் பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். அவரது உடல் டெரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய நினைவாக, அவரது பக்தர்கள் கோவில் ஒன்றை டெரி கிராமத்தில் எழுப்பி, வழிபட்டு வந்தனர். 199ஆ7ம் ஆண்டுக்கு பின்னர், அப்பகுதியை சேர்ந்த சிலரால், அந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை மீட்கும்படிதான், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
Entertainment News
Previous article

