இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில், கைபர் மாகாணத்தில் காரக் மாவட்டத்தில் உள்ள டெரி கிராமத்தில் பரம்ஹன்ஸ்ஜி மகராஜ் சமாதி கோவில் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ், இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறி விட்டதாக மாகாண தலைமைச் செயலர், ஐஜி, கமிஷனர் ஆகியோர் பதிலளித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் வகார் அகமது, இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அவரது வாதங்களைக் கேட்ட அமர்வு, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோவிலை மீட்குமாறு, கைபர் மாகாண அரசுக்கு உத்தரவிட்டது. பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற இந்து மதத் துறவி, 1919ல் பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். அவரது உடல் டெரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய நினைவாக, அவரது பக்தர்கள் கோவில் ஒன்றை டெரி கிராமத்தில் எழுப்பி, வழிபட்டு வந்தனர். 199ஆ7ம் ஆண்டுக்கு பின்னர், அப்பகுதியை சேர்ந்த சிலரால், அந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை மீட்கும்படிதான், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
Entertainment News
Previous article

