அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சிரிய நாட்டு அதிபர் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிரியா அதிபர் ஆசாத், ஜான் கெர்ரியின் அறிவிப்பு குறித்து கூறுகையில், ‘ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் சாதகமான அம்சம்தான். எனவே பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமெரிக்கா உள்பட யாருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்’ என்று கூறினார். எனினும் டமாஸ்கஸ் மற்றும் வாஷிங்டன் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறிய ஆசாத், சிரியாவின் இறையாண்மைக்கு பாதிப்பின்றி நிகழும் எந்த பேச்சுவார்த்தையத வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்தார். முன்னதாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் சிரியா கடந்த 2011–ம் ஆண்டு முதல் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. சிரியா அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சமீபத்தில் கூறுகையில், ‘சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும்’ என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆசாத்திடம் ஒருபோதும் பேரம் பேசமாட்டோம் என அமெரிக்கா பின்னர் அறிவித்து இருந்தது.
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்: சிரிய அதிபர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

