இந்தியர் மீது தாக்குதல் : அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்தியரைத் தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகர் பகுதியில் வசித்து வரும் தனது மகன், மருமகள், புதிதாக பிறந்த பேரக் குழந்தையை பார்த்து வருவதற்காக குஜராத்தை சேர்ந்த சுரேஷ் பாய் படேல் (57) சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 6-ந்தேதி அவர் அந்தப் பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காட்சி தருவதாக போலீசில் ஒருவர் புகார் செய்தார். உடனே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். ஆங்கில மொழி தெரியாத அவர் தொடர்ந்து பதில் அளிக்க முடியாமல் திணறியபோது, எரிக் பார்க்கர் (26) என்ற போலீஸ் அதிகாரி அவரை மடக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் அவர் முடமானார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தியா தலையிட்டு, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது அதைத் தொடர்ந்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது. அலபாமா மாகாணத்தின் கவர்னர் ராபர்ட் பென்ட்லி, இந்திய அரசிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே எரிக் பார்க்கர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பணி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு மேடிசன் போலீஸ் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசு வக்கீல்கள் குழுவினர், எரிக் பார்க்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இது தொடர்பாக உதவி அட்டார்னி ஜெனரல் வனிதா குப்தா, அலபாமா வடக்கு மாவட்ட அட்டார்னி ஜாய்ஸ் வான்சி ஆகியோர் எரிக் பார்க்கர் மீது பதிவு செய்த குற்றச்சாட்டில்… சுரேஷ் பாய் படேலை கீழே தள்ளிவிட்டு எரிக் பார்க்கர் முடமாக்கி விட்டார். பார்க்கரின் செயல்கள், அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி, பாதிக்கப்பட்ட நபர் உரிமையை இழக்க செய்துள்ளது. போலீஸ் அதிகாரிகள், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் பதவி ஏற்கிறார்கள். தங்களது பதவிப்பிரமாணத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காக்காமல், மீறி, பலப்பிரயோகம் செய்த ஒருவர் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் – என்று கூறப்பட்டுள்ளது. எரிக் பார்க்கர், தன் மீதான குற்றசாட்டை மறுத்து விட்டார். இதையடுத்து அவர் மீது அடுத்த மாதம் 29-ஆம் தேதி முறைப்படியான நீதிமன்ற விசாரணை தொடங்கி நடைபெறும். இந்த வழக்கில் எரிக் பார்க்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அமெரிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories