சீருடைக் குழப்பம்: சச்சின் மெழுகுசிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றம்

Published:

sachin-wax-statue-sydney சிட்னி: இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மெழுகுச் சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. சீருடைக் குழப்பமே அதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. பிரபலஸ்தர்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது. சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். இந்நிலையில், சச்சினின் 40 ஆவது வயதுக்கு சில தினங்களுக்கு முன்னர் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், அந்தச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சீருடைதான். அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது வீரர்கள் அணிந்திருந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியாடவில்லையாம். இந்த விவரம் அமைப்பாளர்களுக்குத் தெரிய வந்ததை அடுத்து, அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img