தவறாக அனுப்பப்பட்ட மெயில்: மோடி உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு

சிட்னி: கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டபோது, பிரதமர் மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. இதற்கு தவறாக அனுப்பப் பட்ட இமெயில் காரணமாகியுள்ளது. 2014 நவம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட் 31 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாநாட்டில் கலந்து கொண்ட 31 தலைவர்களின் பிறந்த தேதி, பதவியின் பெயர், பாஸ்போர்ட் எண், விசா விவரம் மற்றும் சில தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ரகசியக் கோப்பினை ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை ஊழியர் ஒருவர் தவறுதலாக ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்துபவர்களில் ஒருவருக்கு இமெயிலில் அனுப்பியுள்ளார். இமெயிலைப் பெற்றவர் இது தனக்கு தவறுதலாக அனுப்ப பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியபிறகே அவருக்கு தனது தவறு புரிந்தது. இவ்வாறு தகவல் கசிந்த விவரம் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என குடியேற்றத் துறை அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டபடி, அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்தத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லையாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories