ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?

ICC-mustafa-kamaal ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை அளிக்க தன்னை அழைக்காததால் முஸ்தபா கமால் கடும் கோபத்தில் இருந்தார். இந்தக் கோபத்தாலேயே தனது பிரசிடெண்ட் தலைமைப் பதவியை அவர் ராஜினாமா செய்தாராம். மேலும், ஐசிசி தலைவர் (Chairman) சீனிவாசனுடனான மோதலின் எதிரொலியாகவே முஸ்தபா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அமைப்பில், தலைவரைக் காட்டிலும் பிரசிடென்ட் பதவி என்பது சற்றே உயர் பதவி என்று கருதப் படுகிறது. இருந்தபோதும், தலைவருக்கே செயல்திட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தமும் ஆத்திரமும் முஸ்தபா கமாலுக்கு இருந்தது. மேலும், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வங்க தேச வீரர் ஒருவர் போட்ட பந்தை நோபால் என்று அறிவித்த போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதகவும் தாம் ராஜினாமா செய்வதாகவும், முஸ்தபா கமால் உடனே ஒரு அறிக்கை விட்டார். இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, “உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை வழங்க நான் அனுமதிக்கப் படவில்லை. இதனால் எனது தூக்கம் பாழானது. ஏனெனில் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். எனது உரிமை பறிக்கப்பட்டது. நான் எனது ராஜினாமா கடிதத்தை ஐசிசி-க்கு அனுப்பிவிட்டேன். என்னால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. இவர்கள் கிரிக்கெட்டை நடத்த தகுதியில்லாதவர்கள். இவர்கள் ஆட்டத்தை மாசுபடுத்தி வருகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை மக்கள் ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இருப்பினும், இந்திய வங்கதேசப் போட்டியில், ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை மறுக்கும் விதமாக நடுவர் நோ பால் கொடுத்த விவகாரத்தை அடுத்து, ஐசிசியை கடுமையாக விமர்சனம் செய்ததால், முஸ்தபா கமாலை உலகக் கோப்பையை வழங்க அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முஸ்தபா கமாலின் விமர்சனத்துக்கு சீனிவாசன் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி வாரிய உறுப்பினர்களிடன் தனது அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஐசிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஐசிசி நடத்தும் தொடர்கள் அனைத்திலும் கோப்பையை பிரசிடெண்ட் மட்டுமே அளிக்க முடியும் என ஜனவரி 2015-இல் முழு உறுப்பினர் குழுவும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு முடிவு செய்தனராம். அதனால் இதில் எந்த விமர்சனத்துக்கும் இடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஐசிசி., யில் உலகக் கோப்பை முடிந்த கையோடு ஒரு சூட்டைக் கிளப்பிவிட்டார் முஸ்தபா கமால்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories