ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?

ICC-mustafa-kamaal ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை அளிக்க தன்னை அழைக்காததால் முஸ்தபா கமால் கடும் கோபத்தில் இருந்தார். இந்தக் கோபத்தாலேயே தனது பிரசிடெண்ட் தலைமைப் பதவியை அவர் ராஜினாமா செய்தாராம். மேலும், ஐசிசி தலைவர் (Chairman) சீனிவாசனுடனான மோதலின் எதிரொலியாகவே முஸ்தபா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அமைப்பில், தலைவரைக் காட்டிலும் பிரசிடென்ட் பதவி என்பது சற்றே உயர் பதவி என்று கருதப் படுகிறது. இருந்தபோதும், தலைவருக்கே செயல்திட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தமும் ஆத்திரமும் முஸ்தபா கமாலுக்கு இருந்தது. மேலும், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வங்க தேச வீரர் ஒருவர் போட்ட பந்தை நோபால் என்று அறிவித்த போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதகவும் தாம் ராஜினாமா செய்வதாகவும், முஸ்தபா கமால் உடனே ஒரு அறிக்கை விட்டார். இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, “உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை வழங்க நான் அனுமதிக்கப் படவில்லை. இதனால் எனது தூக்கம் பாழானது. ஏனெனில் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். எனது உரிமை பறிக்கப்பட்டது. நான் எனது ராஜினாமா கடிதத்தை ஐசிசி-க்கு அனுப்பிவிட்டேன். என்னால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. இவர்கள் கிரிக்கெட்டை நடத்த தகுதியில்லாதவர்கள். இவர்கள் ஆட்டத்தை மாசுபடுத்தி வருகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை மக்கள் ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இருப்பினும், இந்திய வங்கதேசப் போட்டியில், ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை மறுக்கும் விதமாக நடுவர் நோ பால் கொடுத்த விவகாரத்தை அடுத்து, ஐசிசியை கடுமையாக விமர்சனம் செய்ததால், முஸ்தபா கமாலை உலகக் கோப்பையை வழங்க அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முஸ்தபா கமாலின் விமர்சனத்துக்கு சீனிவாசன் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி வாரிய உறுப்பினர்களிடன் தனது அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஐசிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஐசிசி நடத்தும் தொடர்கள் அனைத்திலும் கோப்பையை பிரசிடெண்ட் மட்டுமே அளிக்க முடியும் என ஜனவரி 2015-இல் முழு உறுப்பினர் குழுவும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு முடிவு செய்தனராம். அதனால் இதில் எந்த விமர்சனத்துக்கும் இடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஐசிசி., யில் உலகக் கோப்பை முடிந்த கையோடு ஒரு சூட்டைக் கிளப்பிவிட்டார் முஸ்தபா கமால்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories