கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன சொகுசு சொத்துத் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு புறநகர்ப் பகுதியில் சீன நிறுவனங்கள் கட்ட இருந்த சாலைக்கு ஆகும் செலவினை, 520 மில்லியன் டாலரில் இருந்து 225.73 மில்லியன் டாலராகக் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன கூறியுள்ளார். முந்தைய அதிபர் ராஜபட்சவின் அரசில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அப்போது, உலக நாடுகள், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கையை ஒதுக்கியே வைத்திருந்தன. அந்நேரத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டி இலங்கையில் முதலீடுகள் பல செய்ய முன்வந்தது. இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்தது சீனா. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் சிறீசேன, சீனா 1.4 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த இருந்த துறைமுக நகர்த் திட்டத்தை ரத்து செய்தார். இது, சீனாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீறீசேன இந்தியாவுடன் காட்டிய நெருக்கம், சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது. இத்தகைய சூழலில்தான் மார்ச் 29-ல் சிறீசேன சீனா சென்றார். இருப்பினும், அப்போது துறைமுக நகர்த் திட்டம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் பேசவில்லை என்றே கூறினார் அரசு செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன. இருந்தபோதிலும், சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, சட்டம், நில உரிமை ஆகிய அம்சங்களைக் கருதி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சிறீசேன அங்கே கூறியுள்ளார். மேலும், அப்போது, சீன அதிபர் ஜீ ஜின் பிங், இந்த விவகாரத்தில் சர்ச்சை எதுவும் ஏற்பட்டால், இலங்கை – இந்தியாவுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாராம். இத்தகைய பின்னணியில்தான் ரஜித சேனாரத்ன, சீனாவின் நிதியுதவி குறித்துக் கூறியுள்ளார். இது, சீனாவின் பக்கம் இலங்கையை இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!
பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
விளையாட்டு
ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!
பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
விளையாட்டு
ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியா
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

