மோடியைக் கொல்ல சதியா? : இலங்கை நிகழ்ச்சியில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்?

modi in srilanka - 2026
சென்னை:

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியைக் கொல்ல சதி நடந்ததாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஊடகங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மர்ம நபர்கள் சிலர் இந்நிகழ்ச்சிகளின் போது பின் தொடர்ந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 12ஆம் தேதி சர்வதேச வெசாக் மாநாடு, கொழும்பு பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் முஸ்லிம் நபர் ஒருவர் கத்தரிக்கோலுடன் உள்ளே நுழைய முயற்சி செய்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு அவர் நுழைந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்து குருந்துவத்தை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபர் முஸ்லிம் மதத் தலைவர் போல் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் நுழைய முயற்சி செய்துள்ளார் என்று தெரிகிறது. இவர், நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில், சீன பிரதிநிதி ஒருவர் செல்லும் அனுமதி அட்டையுடன் செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நபரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து அவரை மேற்படி மருத்துவ அறிக்கைக்காக அங்கொட மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.

கைது செய்யப்பட்ட அடையாளங்களை வெளியிடாவிட்டாலும், அவரின் மகள் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. இதேநேரம் அன்று பெண் ஒருவரும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் அனுமதியின்றி நுழைய முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மோடியை தாக்குவதற்காகவே இவர்கள் வந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், இந்தச் செய்திகள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories