முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

Published:

chidambaram karthi - 2026
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வீட்டிலும் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ
அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள் உள்பட அவர்களுக்கு சொந்தமான மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனைக்கான காரணம் அதிகாரப்பூர்வ வெளியாகவில்லை.

9 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தி ல்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஏர் செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்ததாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அனுமதி கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, அவர் மீதும், இந்திராணி, பீட்டர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்நிலையில், ப.சிதம்பரம் தற்போது டெல்லியில் உள்ள நிலையில், அவரது வீட்டில்
சிபிஐ சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img