
என் மீதான விசாரணையை கைவிட்டாலும், கடந்த 7 வருடங்களாக எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கியமான ரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. இந்நிலையில், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்ற அசாஞ்சே மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும், அசாஞ்சே தன் கோபத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
என் மீது அவதூறு சுமத்தி 7 ஆண்டுகளாக தடுத்து வைத்திருந்த ஸ்வீடன் அதிகாரிகளின் செயலை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.
பாலியல் வழக்கு விசாரணையை ஸ்வீடன் கைவிடும் முடிவை ஈக்வடார் வரவேற்றுள்ளது. அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Detained for 7 years without charge by while my children grew up and my name was slandered. I do not forgive or forget.
— Julian Assange (@JulianAssange) May 19, 2017
https://t.co/0VmWWBCxfC pic.twitter.com/ubFLuVc0Gs
— Julian Assange (@JulianAssange) May 19, 2017



