இரண்டே நாளான பச்சைக் குழந்தை கத்திக் குத்துக்களுடன் தெருவில் கிடந்த பரிதாபம்!

baby-1

அர்ஜென்டினா நாட்டில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று கத்திக்குத்து காயங்களுடன் தெருவில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு அர்ஜென்டினா மாகாணம் மிஷனஸ் பகுதியிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழந்தையை மீட்ட நபர் உடனடியாக அருகாமையில் அமைந்துள்ள காவல் நிலையத்தை நாடவும், அவர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் குழந்தையை சேர்ப்பித்துள்ளனர்.

அவசர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

baby1

காயமடைந்த குறித்த குழந்தையை போசாடாஸ் நகரில் உள்ள கோஸ்டனேரா ஓஸ்டே அவென்யூவில் ஒரு வழிப்போக்கர் முதலில் கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.
அந்த நபரே போலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

பச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது என்றாலும், உயிர் அபாயம் இல்லை என்றே மருத்துவர்கள் பின்னர் தெரிவித்தனர்.

மட்டுமின்றி பிறந்து 2 நாட்கள் மட்டுமேயான அந்த குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.

இதனிடையே, துரிதமாக விசாரணையை முன்னெடுத்த போலிசார், குழந்தையின் தாயாரை கைது செய்துள்ளனர்.

குழந்தை தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியதாகவும், உயிர் தப்பும் என்றே நம்புவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துருப்பிடித்த கத்தியால் குழந்தை தாக்கப்பட்டிருந்தாலும், உள் உறுப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குழந்தை உயிர் தப்ப முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைதான அந்த கொடூர தாயார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories