பாலில் குளியல்… ஒருவர் கைது!

Published:

milk-bath
milk-bath

சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவர் வரை பால் அருந்துவதும் பாலால் ஆன பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் பார்த்திருக்கிறோம். அதோடு பாலில் கலப்படம் செய்து பணம் சம்பாதிப்பவர்களையும் கண்டுள்ளோம். பால் உற்பத்தியில் சுகாதாரம் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

அப்படி இருக்கையில் ஒரு டெய்ரி ஃபாமில் பணிபுரியும் ஒரு ஊழியர் பால் தொட்டியில் குளிக்கும் வீடியோவைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

டர்க்கியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீடியோவில் அந்த மனிதர் குவளையால் எடுத்துத் தலைமீது பாலை ஊற்றிக் கொள்கிறார்.

செய்தி அறிந்த போலீசார் பாலில் குளித்தவரை கைது செய்து சிறையில் தள்ளினர். அதுமட்டுமின்றி வீடியோ எடுத்த மனிதரையும் கூட பாதுகாப்பில் எடுத்துக் கொண்டனர். அந்த டெய்ரியை மூடி விடும்படி உத்தரவிட்டனர்.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img