உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது மற்றும் கடைசி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்தத் தொடரில் இந்தியா மிகக் கடுமையான போட்டியை எங்களுக்குக் கொடுக்கப் போகிறது. இந்தியாவின் இந்தப் புத்தெழுச்சிக்கு கேப்டன் தோனியின் தலைமையே காரணம் என நான் கருதுகிறேன். இந்திய அணி தற்போது மிகச் சிறந்த நிலையில் உள்ளது. நாங்களும் அதற்கேற்பத் தயாராகி வருகிறோம். இது எங்களுக்கு மிக அருமையான வாய்ப்பு. ஆஸ்திரேலியாவுக்காக ஒவ்வொரு முறை நாங்கள் களத்தில் இறங்கும்போதும், அது எங்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே இருந்துள்ளது. நாளையும் அதுபோல் இருக்கும். எந்த வித்தியாசமும் அதில் இல்லை. ஆனால், மிகச் சிறந்த அணி ஒன்றுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம்” என்றார்.
இந்திய அணியின் புத்தெழுச்சிக்கு தோனி தலைமை காரணம்: மைக்கேல் கிளார்க்
Popular Categories


