நைஜீரியா: 500 பேரைக் கடத்தியது போகோ ஹராம்!

Published:

nigeria டமாஸாக்: நைஜீரியா நாட்டில்,பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் அமைப்பு, அங்கே தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் என பலரை ஆயுத முனையில் கடத்திச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவின் டமாஸாக் நகருக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் பலியாயினர். அதன் பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் சிறுவர் சிறுமியர் என சுமார் 500 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் மைக் ஒமேரி, இந்த எண்ணிக்கை குறைவாகவும் இருக்கலாம், ஆனால் துல்லியமாக எத்தனை பேர் கடத்தப் பட்டனர் என்று தெரியவில்லை என்றார். இந்தப் பகுதியை இந்த மார்ச் மாதத் துவக்கத்தில்தான், நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டனர். மீண்டும் பயங்கரவாதிகள் இப்பகுதியினரைக் கடத்திச்சென்றுள்ளனர். போர்னோ மாநிலத்தில் நைஜர் எல்லையில் அப்பகுதியின் முக்கிய நகரான மைடுகுரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த டமாஸாக் நகரம். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img