அய்யோ.. இதுக்கும் அணில் தான் காரணமாம்..!

Squirrel - 2026

2 நாட்களில் 18 பேரைக் கடித்துக் குதறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது கொடூர அணில் ஒன்று.

இங்கிலாந்தின் பக்லி டவுனில் ஒரு ‘சைக்கோ’ அணில் கட்டுக் கடுங்காத வகையில் அட்டகாசம் செய்துள்ளது.
இரண்டே நாளில் அந்த அணில், 18 பேரை அட்டாக் செய்து காயப்படுத்தி உள்ளது.

இந்த விசித்திர அணிலுக்கு ‘ஸ்டிரைப்’ என்று உள்ளூர்க்காரர்கள் பெயர் வைத்து உள்ளனர். இங்கிலாந்தின் பக்லி பகுதியில் இந்த அணில் சுற்றி வந்ததாம். இந்த அணிலுக்கு பக்லியைச் சேர்ந்த காரின் ரெனால்ட்ஸ் என்பவர் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு தந்து செல்லப் பிராணி போல பாவித்து வந்துள்ளார்.

தற்போது ஸ்டிரைப் குறித்த செய்தி அறிந்து மிகுந்த கவலையில் இருக்கிறார் காரின்.

ஸ்டிரைப் குறித்து காரின் சொல்கையில், ‘அவனுக்குப் பல மாதங்களாக நான் உணவு கொடுத்து வந்தேன். அவன் பொதுவாக பறவைகளுக்குப் போடப்படும் உணவுகளை திருடிச் சாப்பிட முற்படுவான்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அதே நேரத்தில் நான் உணவு தந்தால் என் கையிலிருந்து எடுத்து நல்லப் பிள்ளை போலச் சாப்பிட்டுவிட்டு ஏக்கத்துடன் என்னையே பார்ப்பான்.

அதே நேரத்தில் கடந்த வாரம் நான் உணவு கொடுத்த போது எனது கையை அவன் கடித்துவிட்டான். அப்போது தான் அவன் பலரையும் இதைப் போலக் கடித்துள்ளான் என்கிற செய்தி கேட்டு துயரமடைந்தேன்.

அவனைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஸ்டிரைப் இப்படி இருந்ததில்லை. ஏன் இப்படி அவன் திடீரென்று நடந்து கொள்கிறான் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் அவனின் இந்த செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, நான் அவனுக்கு எப்போதும் உணவு கொடுக்கும் பூங்காவில் பொறி வைத்தேன். அதை வைத்த 20 நிமிடத்தில் அவன் மாட்டிக் கொண்டான்.

அவன் என்னை நம்பி அங்கு வந்தான். அவனை நான் ஏமாற்றி விட்டேன்’ என்று வருத்தத்துடன் முழுக் கதையையும் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டிரைப்பை பிடித்த பிறகு அவன் உள்ளூர் அரசு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். இதையடுத்து அரசு தரப்பு கூறியதாவது, ‘ஸ்டிரைப்பை பிடித்த பின்னர் மருத்துவர் மூலம் அவனை நிரந்தரமான தூக்கத்தில் போட்டுவிட்டோம்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

ஒரு அணிலை இப்படிச் செய்வது வருந்தத்தக்க விஷயமாக இருந்தாலும், நம் நாட்டில் உள்ள சட்டங்கள்படியே நாங்கள் நடந்து கொண்டோம்’ என்று கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories