யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நிலம், பணம்: இலங்கை அரசு

இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை வீழ்த்தி சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தமிழர்கள் பெருவாரியாக அளித்த ஆதரவு அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அதிபராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சிறிசேனா நாளை மறுநாள் (15-ந்தேதி) இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக தமிழர்களுடன் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போது யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி, உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அந்த நிலம் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, வீடு கட்டுவதற்காக தமிழர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்து இருப்பதாக இலங்கை மந்திரியும், மந்திரிசபையின் செய்தித் தொடர்பாளருமான லட்சுமண் கரியெல்லா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். இதில் ராணுவ மந்திரி என்ற முறையில் அதிபர் சிறிசேனா தன் பங்குக்கு 220 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இருப்பதாகவும் லட்சுமண் கரியெல்லா கூறினார். 1,022 தமிழ் குடும்பங்கள் இந்த இடத்தில் மறுகுடியமர்த்த இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. வீடு கட்டிக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2¼ கிரவுண்டு நிலமும், பணமும் வழங்கப்படும் என்று மறுகுடியமர்த்தல் துறை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இதேபோல் கிழக்கு மாகாணத்திலும் வீடு கட்டிக்கொள்ள தமிழர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேயிலை தோட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது, உயர் கல்வியில் இந்தியா-இலங்கை இடையேயான தொடர்பை மேம்படுத்துவது, தூதரக அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருக்கும் அதிகாரிகள் விசா பெறும் முறையை ரத்து செய்வது, முதலீட்டை அதிகரிப்பது, வேளாண்மை துறையில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது போன்ற முடிவுகளையும் இலங்கை மந்திரிசபை எடுத்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories