December 5, 2025, 6:23 PM
26.7 C
Chennai

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

pak terror killed - 2025
#image_title

இந்தியாவால் தேடப்படும் மற்றொரு தீவிரவாதி பாகிஸ்தானில் கொல்லப்பட்டான். 2015 ஆம் ஆண்டு காஷ்மீரின் உதம்பூர் BSF கான்வாய் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஹன்ஸ்லா அட்னான் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டான்.

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் இவன் என்பதும், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையீத்தின் உறவினன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஹன்சியா அத்னன் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.

மேலும் 2016 ல் பாம்போர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஹன்சியாவுக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் லஷ்கர் பயங்கரவாத முகாமிற்கு சென்ற இவன், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்தும் வந்துள்ளான்.

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் ஹன்சியாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், கராச்சியில் உள்ள அவனது வீட்டில் கடந்த 2 மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மர்ம நபர்களால் ஹன்சியா அத்னன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

அவனது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. அதில் படுகாயமடைந்த பயங்கரவாதியை ராணுவத்தினர் ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories