பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்

xi-xin-ping-wife சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தானுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார் ஜீ ஜின் பிங். ஆனால் அப்போது பாகிஸ்தானில் சூழ்நிலை சரியில்லாததால், அவரது பயணம் அப்போது ரத்தானது. அப்போது, பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிர் உல் காதிரி ஆகியோர் இஸ்லாமாபாத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். எனவே தனது பாகிஸ்தான் பயணத்தை அப்போது ஜீ ஜின் பிங் ரத்து செய்தார். இந்நிலையில் ஜீ ஜின் பிங், இன்று பாகிஸ்தான் வருகிறார். பாகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. மேலும், இந்த ஆண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுதான். இஸ்லாமாபாத்தில் ஜீ ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜின்பிங்குடன் அவரது மனைவி பெங் லி யுவான் மற்றும் உயர்மட்ட தூதுக்குழுவினரும் வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனை ஜின் பிங் சந்திக்கிறார். பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாகிஸ்தானின் முப்படை தளபதிகளையும் அவர் சந்திக்கிறார். பின்னர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்திலும் ஜீ ஜின் பிங் பேசுகிறார். பாகிஸ்தான் பயணத்தின் போது, பாகிஸ்தானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘நிஷான் இ பாகிஸ்தான்’ என்ற விருது, ஜீ ஜின் பிங்கிற்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories