கொழும்பு: ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கி உள்ளதாகவும், துபாயில் மட்டும் ரூ. 6500 கோடி பதுக்கியுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் ராஜபட்ச கைதாகக் கூடும் என்றும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் ராஜபட் சமற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அப்போது, ரூ.6500 கோடி அளவுக்கு ராஜபட்ச குடும்பத்தினர் ஷெசல்ஸ் மற்றும் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரி ந்த நாடுகளில் பதுக்கியுள்ளதாகாவும், முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு மீட்டு வரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் ஏப்.23 , 24ஆம் தேதிகளில் ராஜபட்ச இலங்கையின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ராஜபட்ச கைதாவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ராஜபட்சவின் சகோதாரரும், பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சருமான கோத்தபய ராஜபட்சவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும். ஏப். 26, 27ஆம் தேதிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜபட்ச அதிபராக இருந்தபோது திஸ்ஸ அத்த நாயகவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்தும் ராஜபட்சவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் ராஜபட்ச குடும்பத்தினர் வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கியுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் சர்வதேச ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் விவரங்களை அளிக்கும் பட்சத்தில், ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து ராஜபட்ச போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இப்போது, ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரூ. 6500 கோடி பதுக்கல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
விளையாட்டு
FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

