லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச

மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபட்ச, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் அனுப்பப்பட்டுள்ள சம்மன் – புத்தாண்டு பரிசு என்று கூறியுள்ளார். திஸ்ஸ அத்தநாயகவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியதில் ஊழல் என்று கூறப்படுகிறது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் அந்நாட்டு அமைச்சரவையில் ஒருவரை அமைச்சராக நியமிக்க முடியாவிட்டால் அந்தப் பதவியே தேவையற்றது என்றார் ராஜபட்ச. இலங்கை அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அமைச்சர் பதவி அளிக்க ராஜபட்ச முன் வந்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சியை விட்டு வெளியேற அந்த வேட்பாளருக்கு ராஜபட்ச லஞ்சம் அளிக்க முயன்றதாகவும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு மகிந்த ராஜபட்சவுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன பதவியேற்றதிலிருந்து ராஜபட்ச மீதும், அவரது சகாக்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories