மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு! #Srilanka

srilanka security - 2026

கொழும்பு: மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளது இலங்கை அரசு.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய சமூக பதற்றத்தை உருவாக்கும் தகவல்களால் இலங்கையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சமூகப் பதற்றத்தை தணிக்கும் வகையில் இலங்கையில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை முடக்கியது இலங்கை அரசு.

இலங்கையில், கடந்த ஏப். 21 ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தைத் தேர்ந்தெடுத்து, கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, இலங்கையின் புகழ்பெற்ற சர்ச்சுகள், ஹோட்டல்களில் இஸ்லாமிய மத அடிப்படைவாத தற்கொலை பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில், 253 பேர் உயிரிழந்தனர்.

உலகமே அதிர்ச்சி அடைந்த இந்தத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆகியவை பொறுப்பேற்ற நிலையில், இந்த இயக்கங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். தொடர்ந்து இலங்கை முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாத தொடர்பு உள்ளவர்கள் குறித்த விசாரணையும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

குண்டுவெடிப்பு நிகழ்ந்து 20 நாட்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை நேற்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு, பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இலங்கை மக்கள் மெள்ள மெள்ள அச்ச நிலையில் இருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் மூண்டது. சமூக வலைத்தளத்தில் வெளியான வெறுப்பை விதைக்கும் பதிவால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து திங்கள் கிழமை இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இதனிடையே, வழக்கம் போல் பதற்ற நிலை காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி வைக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது!

முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பை அடுத்து சில நாட்கள் இலங்கை முழுவதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டெலிகிராம் என சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், சிலாபம் கலவரத்தை அடுத்து அந்தப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories