February 23, 2026, 10:34 AM
26 C
Chennai

மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு! #Srilanka

srilanka security - 2026

கொழும்பு: மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளது இலங்கை அரசு.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய சமூக பதற்றத்தை உருவாக்கும் தகவல்களால் இலங்கையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சமூகப் பதற்றத்தை தணிக்கும் வகையில் இலங்கையில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை முடக்கியது இலங்கை அரசு.

இலங்கையில், கடந்த ஏப். 21 ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தைத் தேர்ந்தெடுத்து, கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, இலங்கையின் புகழ்பெற்ற சர்ச்சுகள், ஹோட்டல்களில் இஸ்லாமிய மத அடிப்படைவாத தற்கொலை பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில், 253 பேர் உயிரிழந்தனர்.

உலகமே அதிர்ச்சி அடைந்த இந்தத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆகியவை பொறுப்பேற்ற நிலையில், இந்த இயக்கங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். தொடர்ந்து இலங்கை முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாத தொடர்பு உள்ளவர்கள் குறித்த விசாரணையும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்து 20 நாட்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை நேற்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு, பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இலங்கை மக்கள் மெள்ள மெள்ள அச்ச நிலையில் இருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் மூண்டது. சமூக வலைத்தளத்தில் வெளியான வெறுப்பை விதைக்கும் பதிவால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து திங்கள் கிழமை இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இதனிடையே, வழக்கம் போல் பதற்ற நிலை காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி வைக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது!

முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பை அடுத்து சில நாட்கள் இலங்கை முழுவதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டெலிகிராம் என சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், சிலாபம் கலவரத்தை அடுத்து அந்தப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories