சென்னைப் பெண் நியூயார்க்கின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி

rajarajeshwari-american-judgeவாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜ ராஜேஸ்வரி நியூயார்க் நகர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னையில் பிறந்து 16ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றவர் ராஜ ராஜேஸ்வரி. இவர்தான் இப்போது, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன் ரிச்மண்ட் கவுண்டியின் மாவட்ட அரசு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். அவரை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ, நியூயார்க் நகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியாக நியமனம் செய்தார், அவர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். நீதிபதியாக தான் நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், இதை ஒரு கனவு போன்று உணர்கிறேன். இது என் கற்பனைக்கும் எட்டாதது. நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவள். இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவிக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் மேயரிடம் கூறியபோது, இது என் அமெரிக்கக் கனவு மட்டுமல்ல, வேறு எங்கோ ஒரு நாட்டின் மூலையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிவரும் ஏதோ ஒரு பெண்ணுக்கு இது தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். . என்று கூறினார். தற்போது, இரண்டு ஆண் இந்திய நீதிபதிகள்உள்ளனர். ஜெயமாதவன் நியூ யார்க் நகர ஹவுசிங் கோர்ட்டிலும், அனில் சி சிங், நியூ யார்க் நகர சுப்ரீம் கோர்ட்டிலும் பதவியில் உள்ளனர். சட்டத்துறை மட்டுமல்லாமல், அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள், ஆலய திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களையும் அரங்கேற்றியுள்ளார். தனது தாயார் பத்மா ராமநாதன் பெயரால் பத்மாலயா டான்ஸ் அகாதெமியும் நடத்தி வருகிறார். இதன் மூலம் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Topics

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories