சனீஸ்வரரை கண்டு பயம் ஏன்?

saniswara thirunallaru - 2026

பொதுவா ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி இந்த காலங்களில் துன்பம் நிறைந்திருப்பது போல சிலருக்கு இருக்கும்.

ஆனால் அது சனியால் அல்ல வேறு கிரஹங்களினால் கூட நிகழும்.

உதாரணமாக விருச்சிக ராசி, தனுர் ராசி, மகர ராசி, ரிஷப ராசி கன்னி ராசி ஆகியோருக்கு கடந்த சிலமாதங்களாக மந்தமாக அல்லது முடங்கி போனால் போல இருந்திருக்கும். காரணம் சில மாதங்கள் தனூர் ராசியில் சனியுடன் செவ்வாயும் இருந்தது. இவை ஒன்றுக்கொன்று பகை அதனால் செயல்பாடுகள் சரியாக இருக்காது.

மேலும் ஜனன ஜாதகத்தில் சனியின் நிலையை கணக்கில் கொள்ள வேண்டும். சனி தசை சனி புக்தி இவற்றையும் அறிந்து அதற்கு தக்க வாறு பலன் சொல்ல வேண்டும்.

சனீஸ்வரன் ஏழரை சனி நடக்கும் காலங்களில் தான் சிலருக்கு திருமணத்தை முடித்து வைப்பார்.

சனீஸ்வரரின் ஏழரை (விருச்சிகம், தனூர், மகரம்), அஷ்டமம் (ரிஷபம்) , அர்த்தாஷ்டமம் (கன்னி) இந்த கால கட்டங்களில் உங்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் மற்ற கிரஹ நிலைகளை நன்கு அலசி பார்க்க வேண்டும்.

ஜோதிடர்கள் நிறைய பரிகாரம் சொல்லுவர் ஆனால் உண்மையில் ஜோதிட சாத்திரங்களில் பரிகாரம் சொல்லப்படவில்லை அவை நம் திருப்திக்காக பின்னர் சேர்க்கப்பட்டது. கிரஹ ப்ரீதி பண்ணி கிரஹத்தின் வலுவை குறைக்க முடியாது.

உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இது போன்ற கஷ்ட காலங்களில் குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு கோவிலுக்கு செல்லுதல், அன்னதானம் போன்றவற்றை செய்தல் நல்ல காரியங்களை செய்தல் நல்லவற்றை பேசுதல் போன்றவை உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்து துன்பங்களை ஏற்கும் மனோ திடத்தை உண்டாக்கும்

சனீஸ்வரரை கண்டு அஞ்ச வேண்டாம்.

– ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன் (ரவி சாரங்கன்)

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories